கிளிநொச்சியில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட கஞ்சாத் தோட்டம்

கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை முற்றுகையிட்ட வேளை காணி உரிமையாளர் தப்பியோடியுள்ளார். குறித்த கஞ்சா பயிரிடப்பட்டு 5 மாதங்கள் நிரம்பியதான பயிரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.